Monday, May 25, 2009

கோவிலுக்குச் செல்வோம்

கோவிலுக்குச் செல்வோம்
ஒரு ஊரில் கோவில் அமையப்பெற்றால் இறை நம்பிக்கை உடைய அனைவரும் ஓரிடத்தில் கூடி பிரார்த்தனை செய்வார்கள் சிற்பக்கலைஞர்கள், கட்டிடக்கலைஞர்கள் மரவேலை செய்வோர், வர்ணம் பூசுவோர் வேத விற்பன்னர்கள், ஆபரணம், தானியம், பூஜைப்பொருள் விற்போர், விபூதி, பால், எண்ணை, பூ வியாபாரம் செய்வோர் வேலை வாய்ப்பு பெறுவர். ஆதி காலத்தில் இயற்கை சார்ந்த தொழில்களே அதிகம் நடை பெற்றன. இறைநம்பிக்கை அதிகமாக இருந்தது. எளிய முறையில் அனைத்து சமூகத்தினரும் நலம் பெறவே கோவில்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உருவாக்கப்பட்டு சித்தர்கள் முனிவர்களால் மருத்துவ மந்திர பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு தலைமுறைகளும் பயன் பெறும் வண்ணமும், இயற்கை சார்ந்த தொழில்கள் தொடர்ந்து நடைபெறும் வண்ணமும் பல்வேறு வழிபாட்டு முறைகளும் படைக்கப்பட்டன. செருப்பு பாதுகாப்பு முதல் பூ , கற்பூர வியாபாரி உட்பட அர்ச்சகர் வரை தொழில் கிடைக்கப்பெற்று அவரவர் குடும்பம் வாழ வழி கிடைக்கிறது. கோவிலுக்கு வரும் ஒவ்வொருவரும் பல்வேறு குடும்பங்கள் வாழ வழி செய்கிறோம்.
உண்மை உணர்வோம் . முன்னோர்களைப் போற்றுவோம் . கோவிலுக்குச் செல்வோம்.

Sunday, May 10, 2009

பசங்க சிறந்த தமிழ்படம் Pasanga - Best movie of the year 2009

நேற்று சத்யம் (சாந்தம்) திரையரங்கில் பசங்க படம் பார்த்தேன். அழகி, பள்ளிக்கூடம், பூ போன்ற படங்களின் வரிசையில் இதுவும் ஒரு படமோ என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். ஒரு விளம்பரத்தில் "டாக்டர் அப்துல் கலாம்" அவர்களின் கனவு காணுங்கள் என்ற வாசகம் போடப்பட்டிருந்தது பத்திரிகை பேட்டி ஒன்றிலும் இயக்குநர் பாண்டிராஜ் "இது படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் என்று சொல்லியிருந்தார். சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு இயக்குனர் சசிகுமார் அவர்களின் சொந்த தயாரிப்பு என்பதாலும் இசையமைப்பாளர் திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் அடுத்த படம் என்பதாலும் (எனது குடியிருப்பு பகுதியில் மின் வெட்டு காரணமாகவும் அலுவலக விடுமுறை என்பதாலும் ) அதிக எதிர்பார்ப்புடன் படம் பார்க்க போனேன்.

அரசு பள்ளியில் பயின்ற ஒவ்வொரு மாணவ மாணவியையும் இத்திரைப்படம் வெகுவாக கவரும் . மாணவர்களுக்கான படமாக மட்டுமின்றி பெற்றோருக்கும் இதுவொரு சிறந்த பாடம் என்று சொன்னால் அது மிகையன்று. யதார்த்தமான குடும்ப சூழல், பாத்திரப்படைப்பு , வசனம், இயக்கம், இசை , தொய்வில்லாத திரைக்கதை என எத்தனை பாராட்டினாலும் தகும்.

சிறந்த தயாரிப்பாளருக்கான விருதினையும் சிறந்த இயக்கம் சிறந்த படம் என எத்தனை விருது கொடுத்தாலும் தகும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் விதமாக ஒரு பாடத்தில் மூன்று தரப்பு கதையை இணைத்து அற்புதம் நிகழ்த்தியிருக்கும் இயக்குனருக்கு கோடானு கோடி நன்றிகள்.

Child development எனது உளவியல் பாடப்பகுதியில் ஓன்று . ஒரு தனி மனிதனின் சிந்தனை ஒரு நேர கோட்டில் செல்ல வேண்டுமாயின் குடும்பம் முதலாவதாகவும் சுற்றமும் நட்பும் என்கிற பிற சமூக உறவுகள் அதற்க்கு வலுவூட்டுவதாகவும் இருக்க வேண்டும் .

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் என்பது கணவன் மனைவி உறவுக்குமட்டுமல்ல ஒவ்வொரு உறவுக்கும் அதுவே அடிப்படைத்தேவை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும் போது நிச்சயம் இந்தியா என்கிற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு உலகின் மிகப்பெரிய மனித வள நாடக திகழும் என்பதில் ஐய்யமில்லை .

பசங்க திரைக்குழுவிற்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.

பசங்க சிறந்த தமிழ்படம்

Monday, April 28, 2008

அன்பே சிவம்

அன்பே சிவம் படம் பார்க்கும் வரையில் கமல் பற்றி ஆராயத்தோன்றவில்லை முதல்முறை அன்பே சிவம் பார்த போது மனிதநேயம் என்ற நிலயிலேயே நான் அறிய முடிந்தது அப்போது சமய தத்துவ நூல்கள் பயிலவில்லை ஓராண்டுக்கு பிறகு பாகவதம் பயின்ற பிறகுதான் பல்வேறு கருத்துக்களை புரிந்துகொள்ள முடிந்தது. விகடன் மதன் அவர்களின் வசனம் பகுத்தறிவின் முறையான வெளிப்பாடாக இருந்தது. அனைவரும் கடவுள் என்ற ஆன்மநேய தத்துவம் பிறகுதான் உணர முடிந்தது. விவேகானந்தரின் கர்மயோகி, ஞானயோகி விளக்கங்களை உணரமுடிந்தது. இத்திரைப்படம் எனக்கு ஒரு பாடப்புத்தகமே.. தசாவதாரம் திரைப்படப் பாடல்கள் கேட்டதால் கமல் பற்றி எழுதத்தோன்றியது... இன்னும் எழுதுவேன்..

Saturday, April 26, 2008

மன மாற்றம் தந்த நூல் :


விவேகாந்த கல்லூரியில் பணியாற்றிய பொழுதுதான் சமயநூல்கள் அறிய வாய்ப்பு கிட்டியது. குருகுல வாழ்க்கைப் பற்றி அறியவும் வாய்ப்பு கிட்டியது. கபிலரின் சாங்க்ய யோக சூத்திரம் பயில முடிந்தது , நான் அப்பொழுது உளவியல் இளநிலை முதலாமாண்டு பயின்று வந்த காரனத்தால் மனதில் மிக அதிக மாற்றத்தை உணர முடிந்தது.

சாங்க்ய யோக சூத்திரம் தமிழிலில் முழுமையாக கிடைத்தால் மிக நன்றாக இருக்கும். யாரேனும் அறிந்தால் தெரிவிக்கவும்.

தேடுகிறேன்.

Wednesday, April 9, 2008

ஒரு உணர்வு

முதல் முறையாக பிளாக்ல் பெண்ணின் கவிதை கண்டேன் மகிழ்ச்சி. அவளுக்காக எழுதியது.

இருப்பதை தொலைப்பது, சும்மா கிடைத்ததை தொலைப்பது, பாடுபட்டு கிடைத்ததை தொலைப்பது ..இப்படி தொலைப்பதும் - இருப்பதை தொலைத்து - தேடுவது, சும்மா கிடைத்ததை தொலைத்து - தேடுவது, பாடுபட்டு கிடைத்ததை தொலைத்து - தேடுவது ..இப்படி தொலைத்ததை - தேடுவதும். சுகமே...

இரண்டு பாடல்கள் நினைவில் (1) - ஜே-ஜே; தேடி தேடி தேடி தீர்ப்போமா (2) பார்த்தாலே பரவசம்; அன்பே சுகமா அழகே சுகமா...
காதலில் சுகமும் சுமையாகும் சுமையும் சுகமாகும் - காதலின்றி மனிதம் உணர முடியது -

எய்ட்ஸைத் தடுக்கலாம் வரும் வழியும் பரவும் வழியும் தெரிவதால்
காதலைத் தடுக்க முடியாது வரும் வழியும் பரவும் வழியும் தெரியாததால்

அப்பாடா- என்னெல்லாம் தோணுது.... தேடுவோம் தேடுவோம்... ஒரு உணர்வு

Friday, March 28, 2008

தமிழன் ஏன் பிற மொழிகளைப் பயில வேண்டும்?

உலகில் உள்ள பழைமையானதும் எளிமையானதும் நம் தாய்மொழி தமிழ். அம்மொழி பிற மொழியாளருக்கு எளிமையானது எளிதில் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். பன்மொழி பயில்வோம். தமிழ் தவிர பிற இந்திய மொழிகளில் உச்சரிப்பேற்றவாறு தனித்தனி எழுத்துக்கள் உள்ளன. நமக்கு பிற மொழி பயில்வது சற்று கடினமே. மனது வைத்தால் அனைத்தும் எளிமையானதே.

திண்ணை வலைத்தளத்திலிருந்து......காந்தியார், பெரியார், சாதிகள்

காந்தியார், பெரியார், சாதிகள்
வீ செல்வராஜ்
காந்தியடிகள் ஆற்றிய இயக்கத்தின் பயனாக சுயராஜ்யம் கிடைத்தது. ஆனால் அனுபவத்தில் காண்பது என்ன ? வெள்லையராதிக்கம் இருந்த இடத்தை கருப்பராதிக்கம் பிடித்துக் கொண்டுள்ளது. தந்தை பெரியார் ஆற்றிய சுயமரியாதை இயக்கத்தின் பயனாக பார்ப்பனர் ஆதிக்கம் தணிந்தது. ஆனால் அனுபவத்தில் மேல்சாதி ஆதிக்கம் இருந்த இடத்தை தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு சாதியும் பிடித்துக்கொள்ளப் போட்டியிடுகிறது.
காந்தியார் கண்ட கனவும், பெரியார் கண்ட கனவும் சமுதாய சமத்துவம் என்றாலும் சாதிப்பிரிவுகள் என்றும் போல் இன்றும் உள்ளன. அன்று அது கோவில், குளம், உணவு விடுதிகள் ஆகிய சமுதாய நிறுவனங்களைப் பீடித்திருந்தது. இன்று அது அரசியலில் தலைவிரித்தாடுகிறது. அரசு பதவிகளுக்கு சாதிவாரியாக உரிமை கொண்டாடுவதிலும், சலுகைகள் பெறுவதிலும் தீவிரம் அதிகரித்து வருகிறது. சாதி வேற்றுமை நமது சமுதாயத்தைப் பீடித்துக் கொண்டிருக்கிற சாபத்தீடாகவும் புதிராகவும் இருந்து வருகிறது. ஏன் ?
பண்டை காலத்தின் வருணாசிரம தர்மம் தடம் புரண்டதால் சாதிகள் உருவாயின என்பது காந்தியடிகள் கருத்து. வருணாசிரமம் குலைந்தால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படும் என்று கீதையில் கண்ணன் உபதேசித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். வேறு எந்த சீர்திருத்தக்காரர்களையும் விட அவர் வருணாசிரம தர்மம் பற்றி அதிகம் ஆராய்ந்திருக்கிறார். பாரம்பரிய வழியாக ஒவ்வொரு தனிமனிதருக்கும் கிடைக்கும் பிறவிக்கூறு- மனிதசுபாவம் அல்லது சுதர்மம்- அதாவது சத்துவம், ரஜஸ், தமம் ஆகிய முக்குணக் கலப்பில் ஏற்படும் இயற்கையான வேறுபாடுகள் ஆகியவற்றை அனுசரித்து சமுதாயத்தில் உருவான நான்கு கடமை - தொழிற்பிரிவுகள் வருணாசிரம தர்மத்தின் அடிப்படை, இதன்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரன் என்ற நான்கு வருணங்கள் தோன்றின.
சமுதாயத்துக்கு ஒவ்வொரு தனி மனிதரும் ஆற்ற வேண்டிய கடமை அல்லது தொழிற்பிரிவுகளே தவிர இதற்கு சாதிப்பிரிவுகளுக்கும் தொடர்பில்லை என்று காந்தி எச்சரித்தார். நான்கு வருணாசிரமங்களை அவர் ஆதரித்த போதிலும் சாதிப்பிரிவுகளை அவர் வன்மையாகக் கண்டித்தார். சாதி ஒழிப்பு இயக்கமும் நடத்தினார். --------------------------------------------------------------------------------------..............................................................காந்தியடிகளும், தந்தை பெரியாரும் தன்மான உணர்வில் இணைவதால் அவர்களிடையே நிலவும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் புதிர்களுக்கிடையிலும் சமுதாய சீர்திருத்த பணிகளில் அவர்கள் ஒருமைப்பாடு காண்கிறார்கள்.
***
பெரியாரும் காந்தியாரும் என்ற நூலின் 7ஆம் அத்தியாயம்.
***
திண்ணை நவம்பர் 28, 1999

Video Bar

Loading...

BlogCatalog